Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி கே. சேகர்பாபு அவர்கள் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.