Close

மெரினா கடற்கரை

வழிகாட்டுதல்

வங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும். வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையின் தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. சென்னை மரினா பீச் 1880 களில் ஆளுநர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. சென்னை வருகை தரும் சுற்றுலா பயணிகள், இந்த பெரிய கடற்கரைக்கு தவறாமல் வருகை தர வேண்டிய இடம்.மெரினா கடற்கரை பஸ்கள், டாக்சிகள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மூலம் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது.

மெரினா கடற்கரை செயல்பாடுகள்

மரினா கடற்கரை அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் செயல்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரையுடன் நடைபயிற்சி எல்லாருக்கும் ஒரு இனிமையான அனுபவம். மாலை இந்த கடற்கரையில் கலைப்பொருட்கள் விற்பனை, கைவினை பொருட்கள், இன நகை, மற்றும் உணவு பொருட்களின் விற்பனையுடன் பல கடைகள் அமைந்திருக்கும். குழந்தைகள் விளையாட சிறந்த இடம் .

கடல் வலுவானதாக இருப்பதால் கடலில் செல்வது நிபுணத்துவ வழிகாட்டலின் கீழ் செய்யப்பட வேண்டும். காற்றாடிகள் பறக்க விடுவதும் மற்றும் குதிரை சவாரி இந்த கடற்கரையில் பிரபலமான நடவடிக்கைகள்.

மெரினா கடற்கரையில் ஈர்க்கும் இடங்கள்

மரினா கடற்கரையில் மீன் அருங்காட்சியகம் மற்றும் ஐஸ் ஹவுஸ் முக்கிய இடங்கள். செப்பாக் அரண்மனை, செனட் ஹவுஸ், பி.டபிள்யூ.டி அலுவலகம், பிரசிடென்சி கல்லூரி, மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வரலாற்று கட்டிடங்கள்.

மரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை மற்றும் மகாத்மா காந்தி முக்கிய இரண்டு சிலைகள் ஆகும். மற்ற சிலைகள் – சுவாமி சிவானந்தா, ஔவையார், தந்தை பெரியார், திருவள்ளுவர், டாக்டர் அன்னி பெசன்ட், ஜி.யு. போப், சர் தாமஸ் மன்ரோ, சுப்பிரமணிய பாரதியார், காமராஜர், ராபர்ட் கால்ட்வெல், கண்ணகி, காமராஜர், எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன்.

புகைப்பட தொகுப்பு

  • மெரினா கடற்கரை
  • மெரினா கடற்கரை
  • காலை நேரத்தில் மெரினா கடற்கரையில்

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை விமான நிலையதில் இருந்து 45 நிமிடங்களில் இந்த இடத்தை அடையலாம்

தொடர்வண்டி வழியாக

அருகில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையம் உள்ளது

சாலை வழியாக

இங்கு வர அடிக்கடி பேருந்து வசதி உள்ளன